வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

நண்பருடன் கதைத்தவை (குஷ்பு இட்லி) 15+ வயதுடையவர்கள் மட்டும்

நானும் நண்பரொருவரும் உணவகத்திற்கு சென்றிருந்தோம் அங்கு எனக்கு குஷ்பு இட்லி சொன்னேன். நண்பர் சிரித்தார், ஏன் என்றதற்கு

ஆமா இதுக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா ? -- நண்பர்

குஷ்புமாதிரி இருக்கின்றதால் -- நான்

குஷ்புமாதிரி என்ன ?

ம்ம்ம்ம்...........

என்னப்பா பதிலக்கானும் ?

என்னத்த சொல்ல............. வைரமுத்துவின் வார்த்தையில் சொல்லனும்னா கழுத்துக்கு கீழ் கவிதைகள் இரண்டுனு சொல்லலாம்.

ஆமா ஒரு சாப்பிடும் பொருளுக்கு எதை உவமையாக வைத்து பெயரிடுகின்றீர்கள் ?
இது சரி என நிணைக்கின்றீர்களா ?

மனிதர் விடமாட்டார் கேள்வினு வந்தால் வரிசையாக கேட்டுகிட்டே இருப்பார், என்ன கடைசியில் ஏதேனும் விடயம் இருக்கும்

அதனால் சரணடைந்து விடுவதே உத்தமம்.
சரி சொல்லுங்க எனக்கு அந்த இட்டலி பிடித்திருக்கின்றது (அய்யொ.... கண்டிப்பா அந்த பேருக்காக இல்ல. -- ஆமா இப்பவே சொல்லிட்டேன்.)

இல்லை உணவையும், காமத்தையும் சம்மந்தப்படுத்துரிங்களே அதான் கேட்டேன் -- நண்பர்

..............................எல்லாம் ஒரு கிளுகிளுப்புத்தான்

காமத்தை வாழத்தெரியாமல், குதறிவைக்கின்றீர்களே.

...........................................


தற்போதைய இந்திய காமம் ஒரு அதி உணர்சியாக குறிக்கப்படுகின்றது.
நம்முடைய திரைப்படங்களில் காட்டப்படுவது என்ன ?
ஒரு சராசரி தமிழரின் காமம் சார்ந்த உரையாடல்கள் எப்படி இருக்கின்றன ?

( அடங்கொய்யா மறுபடியும் அரம்பிச்சுட்டான்யா இரயில் மாதிரி கேள்வி கேக்க .... முடியலயே அதான் முதலிலே சரண் ஆயிடம்ல, சொல்ல வந்தத சொல்லுயா -- என்ன பண்னுரது மனசுக்குள்ளத்தான் கேக்கமுடியும் )

ஒரு அதியுச்ச அவசரத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றது.

ஒரு துப்பட்டா போடாத பெண்ணைப்பார்த்ததும் காமுறும் மனதுள்ளவர்களாகவே நாம் கட்டுறுத்தப்படுகின்றோம்.
நான் அவளை அடையனும்டா.... எனும் வகையான சொல்பிறையோகங்கள்தான் இருக்கின்றன
காதல் காட்சிகளில்கூட நீ எனக்கு வேனும் எனதான் கேட்கப்படுகின்றது.

அதான் சொல்கின்றேன் காமத்தோடு நமக்கு வாழத்தெரியவில்லை, காமம் என்பதை அனுபவித்தல் எனும் பாவணையில்தான் பார்கின்றொம்.

காமத்தில் கரையவேண்டும், காமத்தில் திளைக்கனும், காமத்தில் வெறியேரக்கூடாது.

அவர்பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்

ம்ம்ம்ம்

ஆமாம், நாம் பொதுவாக அன்பின் வழி காமவயப்படுவது இல்லை. வாத்சாயனார், திருவள்ளுவர், ஆண்டாள்னு அழகா பதிந்துவிட்டு போயிருக்காங்க

ஒரு தவம்போல்
காமத்தில், காதலில் திழைத்திருக்கும்
வழியரியாமல் மீன்
கொத்தும் கொக்குகளாய் இருக்கின்றொம்


அதென்ன 15+ வயதுடையவர்கள் மட்டும் உனக்கென தனியாக தரம் இருக்கின்றதா என கேட்பது தெரிகின்றது.

ஏதோ என்னால முடிஞ்சது 15 வயதிலேயே நம்ம பிள்ளைகள் இதைப்பற்றி யோசிக்க தொடங்கிவிடுகின்றனர் அதான்.

<--<<நெஞ்சுக்குள் நெருப்புடன் இருப்பதே ......... வாழ்வு>>-->

என் பழைய நண்பி


கக்கத்தில் குழந்தையுடனும்
கையில் உருளும் சொற்றுடனும்
''ஒரு வாய் சாப்பிடேன் ''
சாப்பிடுகிறேனோ இல்லையோ
ஊட்டிவிடுவது சந்தொஷம்
கோழி விரட்டும்போது சிதரிய
பருக்கைகளைப் பார்த்துக்கொண்டு

மின்சாரம் அற்றுப்போன இரவு

மின்சாரம் அற்றுப்போன இரவு



எதுவும் சரியாய் தெரியாமல்
தட்டித்தடவிதான் செய்யவேண்டியிருக்கின்றது
''இப்படியே இருந்துவிட்டால்...''
எண்ணமே பயம்கொள்ள வைக்கிறது,
காற்றுகூட வராமல் புழுக்கத்தில்
வேலையே ஓடமாட்டேங்கிறது
என்றாலும் ;


பூதமாய் நம் நிழல்கள் விரிய
லாந்தர் விளக்கொளியில்
இங்குமங்கும்
அலைந்து கொண்டிருப்பதும்
நன்றாய்தான் இருக்கிறது






குடம் சுமக்கும் சிறுமி




உனக்கென்ன கிழே இறக்கும்வரை
உடல் வருத்தம்
பார்த்த எனக்கோ
நாளெல்லாம் மன வருத்தம்
பாவம் பிள்ளையென்று.

நண்பருடன் கதைத்தவை (மனோநிலை)


நானும் நண்பரும் எங்கள் மேளாலருடன் (அவர் ஒரு ஜெர்மனியர்) அன்றைய பணிமுடிந்து அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தோம்.

வரும் வழியில் ஒரு ஹம்மர்(HUMMER) மகிழுந்து எங்களை கடந்து சென்றது, இனி அவர்களின் உரையாடல்.....

மேளாலர் - வண்டியை பார்த்தாயா

நண்பர் - ம்ம்ம் ....... நல்ல வண்டி

எனக்கு இந்த வண்டியை பிடிக்காது

..........................

அதிக வேகம் செல்லாது, நகரத்திற்குள் என்றால் நன்றாக இருக்கும், ஆனால் நெடுஞ்சாலைகளில் வேகம் இருக்காது, மேலும் எரிபொருள் தேவை அதிகம்.

...........................ம்

எனக்கு அயுடி(AUDI) வண்டி பிடிக்கும் அதிகபட்ச வேகம் 250 கி.மீ

...........................


நண்பர் அறைக்கு திரும்பியவுடன் கூறினார்

என்ன தல ஹம்மர் பிடிக்காதுன்றான் என்ன! வண்டி அது.

அவர் விருப்பம் அது

என்ன மாதிரியான வண்டி அது !
அமெரிக்க இராணுவம் அவர்களுக்காக உருவாக்கிய வண்டி

இருக்கலாம் ஆனா அதற்கு அவர் கூறிய காரணங்களும் சரியானதுதானே ?
இருந்தாலும் எப்படிப்பட்ட வண்டி அது !
நம்ம ஊரில் எல்லாம் அதை வாங்கமுடியாம இருக்கின்றனர் என்னால ஒப்புக்கொள்ள முடியாது


முயலுக்கு மூன்று கால்கள் என
தன்கருத்தில் நின்றுகொண்டு
உள்வரும் விமர்சனங்களை
புறங்கையால் விளக்கி விடுகின்றனர்.



சித்திரா பவுர்ணமி

என்னதான் வருடத்திற்கு
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.

வெள்ளிக் கவசம்



வானமே எல்லையாய் குறுக்கீடற்று
அருளிய எங்கள் தெருமுனை
பிள்ளையார்,
ஐந்தடிக்குள் சிறைபட்டுப்போனார்
பகைவரிடமிருந்து காக்கும்
கவசம் தரித்த பிறகு.

Blog Widget by LinkWithin