வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

மின்சாரம் அற்றுப்போன இரவு

மின்சாரம் அற்றுப்போன இரவு



எதுவும் சரியாய் தெரியாமல்
தட்டித்தடவிதான் செய்யவேண்டியிருக்கின்றது
''இப்படியே இருந்துவிட்டால்...''
எண்ணமே பயம்கொள்ள வைக்கிறது,
காற்றுகூட வராமல் புழுக்கத்தில்
வேலையே ஓடமாட்டேங்கிறது
என்றாலும் ;


பூதமாய் நம் நிழல்கள் விரிய
லாந்தர் விளக்கொளியில்
இங்குமங்கும்
அலைந்து கொண்டிருப்பதும்
நன்றாய்தான் இருக்கிறது






குடம் சுமக்கும் சிறுமி




உனக்கென்ன கிழே இறக்கும்வரை
உடல் வருத்தம்
பார்த்த எனக்கோ
நாளெல்லாம் மன வருத்தம்
பாவம் பிள்ளையென்று.

Blog Widget by LinkWithin