வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

முத்துராமலிங்கம் கிளரியவை

நண்பர் பதின்மரக்கிளை எழுதிய
தவறிய நாணயமும் சிதறிய நாகரீகமும். பதிவை படித்தபிறகு எனக்குள் எழுந்தவை

முதலில் அவரின் இந்த பதிவின் பல கருத்தாக்கங்களை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்

நம் சுயத்தை இயல்பை பன்பை அத்தனையும் தொலைத்து விட்டு எந்த நாகரீகத்தில் அம்மனமாக நிர்க்க போகிறோம்.
என்ற கேள்வி எனக்குள்ளும் இருக்கின்றது.

இந்த நாகரீகம் எங்கிருந்து வந்ததோ அங்கும் இப்படிதான் இருக்குமா? தெரியவில்லை. எனும் வரிகளின் வாயிலாக இந்த விடயங்கள் வேறு எங்கோ இருந்து வந்தது பொன்ற மாயை தோன்றுவதாக உணர்கின்றேன்

நாகரீகம் என்றும்; வழக்கம், பண்பாடு என்றும் நம் மண்டைக்குள் ஆணி அரைந்து யோசிக்கும், சிந்திக்கும் அறிவை குறைத்தது யார்?

இந்த முறைமைகள் வேறு எங்கிருந்தும் வரவில்லை, இங்கிருந்தே, நமக்குள்ளிருந்தே வந்தது.

அடுத்தவர் என்ன சொல்வார், என்ன நிணைப்பார் என இந்த இந்திய நாகரீகம் நமக்குள் திணித்தது எவ்வளவு?

சில நாட்களுக்கு முன் தினசரியில் வந்தது--
சென்னையில் குடி போதையில் மனைவி இல்லாதபோது தன் 20 வயது மகளையெ வன்புணர்ந்த தந்தை.

போதையில் இருக்கும் 40+ வயதுடைய ஒரு ஆணுடன் போராட முடியாத தைரியத்தை எந்த பண்பாடு கற்றுக்கொடுத்தது?

தன்னுடைய உடல் பசிக்கு தான் உரவுகொள்ளும் பெண்னின் சம்மதம் தேவையில்லை என நிணைக்கும் அந்த ஆண் இத்தனை காலம் தன் மனைவியோடு எப்படி இருந்திருப்பார்-- கணவனால் வன்புணரப்படும் கொடுமைகளை இத்தனை காலம் பொருத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது எங்கிருந்து?

எல்லாம் நமக்குள்ளிருந்து வந்ததுதான்.

உள்ளத்தில் ஒளியிருந்தால் எல்லாம் நன்றாய் நடக்கும்.

காதலின் கனவு

திடீரென படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் தெரியாமல் இருட்டு, சட சட வென சப்தம், உடல் புல்லரிக்க குளிர்ச்சி வந்து சூழ்ந்து கொண்டது



அள்ளிக்கோண்டு வருகின்றது மண்வாசனை

ஏதும் புரியாமல் சாளரம் திறந்து பார்த்தால்......



வெளியெங்கும் பரந்து பெய்துகொண்டிருந்தது மழை.



திரும்பி உள்பார்த்தால் குறுஞ்சிரிப்புடனும் கையில் டீ கோப்பையுடனும் ஐன்னல் திண்டில் அமர்ந்திருந்த என் கால் கட்டி உட்காருகின்றாய்

'' யாரடி சொல்லியது நாக்குசுடும் சூட்டுடன் டீ குடித்துக்கொண்டு மழை பார்க்க பிடிக்குமெனக்கு என்று....''



அதோ பாரேன் கிளைக்குள் ஒதுங்கும் குயிலொன்று,
எல்லாவற்றையும் கழுவிய மழை நம்முள்ளும் எதையோ கழுவிவிட்டது வெளி போலவே உள்ளும் குளிர்ச்சி,

நீட்டிய என் கைக்குள் கோர்த்துக்கொள்கின்றன உன் கைகள் உள்ளுக்குள் இறங்கிய குளிர்ச்சி கண்களில் தெரிய



மழை நமக்கு வரம் தரும்

அன்போடு இருக்க

இதமான குளிரிலும்

கடும் சூட்டிலும்

சேர்ந்து இருக்க

கோர்த்த கைகள்

பிரியாமல் இருக்க


புதிய ஆயுதம் கொள்வோம்

எதிரியின் உடலறுப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல

வன்மையாய் கிழித்துக்கொண்டு
எதிர்பவரின் இரத்தம் குடிப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல

இதோ புதிய தலைமுறை
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஆயுதங்கள்

முதல் ஆயுதம் கொடுத்தவன்
முத்துக்குமரன்....
தன் உயிரை உருக்கி
தான் கொண்ட கருத்தில்
வேகமேற்றி எதிர்பவர்களுக்கெதிராய்
விஸ்வரூபம் எடுத்து நின்றான்,

அடுத்து....

மென்மையாய் தன்
கால் காக்கும் காலணியை
ஆயுதமாக்கியவன்
அல் ஜடி
மென்மையை கொண்டு
வலியைத் தரும் ஆயுதம்.
இப்பொழுதெல்லாம் அதிகம்
இது தான் பயன்படுகின்றது


அடுத்தது வருகின்றது
பட்டால் உடைந்துவிடும் ஆயுதம்
சொல்லவா வேண்டும்,
ஆசிட் முட்டையை
அரசியல் அடித்தளமாக்கி வந்தவனை
அடித்தது
அழுகிய முட்டை.

ஆயுதம் செய்வதைவிட
ஆயுதம் பழகுவோம்
நம் எதிர்ப்பை திடமாய் காட்ட

Blog Widget by LinkWithin