வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

சித்திரா பவுர்ணமி

என்னதான் வருடத்திற்கு
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.

வெள்ளிக் கவசம்



வானமே எல்லையாய் குறுக்கீடற்று
அருளிய எங்கள் தெருமுனை
பிள்ளையார்,
ஐந்தடிக்குள் சிறைபட்டுப்போனார்
பகைவரிடமிருந்து காக்கும்
கவசம் தரித்த பிறகு.

Blog Widget by LinkWithin