வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

பிரியங்களுடன் ....


தோட்டக் கிணற்றொளியில்
தெரிகின்றன நம் முகங்கள்,
நிர்சலன வானத்திற்கும்
நிலைகொள்ளா இலைகளுக்குமிடையில்
சலனமற்று ;
நமக்கிடையிலான உணர்வுகளுடன்

************************************************************


அடர்ந்த தூங்குமூஞ்சி
மரநிழல்களில் அமர்ந்திருப்போம்.
கால்நெருடும் சருகுகளும்,
உதிர்ந்த சுல்லிகளும்,
எங்கும் நிறைந்திருக்க

*************************************************************


அடர்ந்த ஊதா நிறங்களில்
பூத்துக்கிடக்கும் கரைமேடுகளில்
நாம் அமர்ந்திருக்க
காத்திருக்கின்றது ஓடை;
சலசலக்கும் மவுனத்துடன்

*************************************************************

(நன்றி பதின்மரக்கிளை இந்த படத்தை அவரிடமிருந்து எடுத்தேன்)
ஓய்ந்த மழைநாட்களில்
மரங்கள் நிறைந்த
சாலையில் நடந்துசெல்வோம்;
சுற்றிலும் நீர்த்திவலைகள் வீழ
நமக்கிடையிலான மென்மையை
அசைபோட்டுக்கொண்டு

2 comments:

லோகு 8 ஏப்ரல், 2009 அன்று AM 7:28  

படங்களும் கவிதையும் அருமை நண்பரே..

வனம் 8 ஏப்ரல், 2009 அன்று PM 9:38  

நன்றி லோகு - தங்கள் கருத்துக்கு.

எண்னுடைய பழைய நண்பரொருவருன் பெயரும் உங்கள் பெயர்தான்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin