வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

கொஞ்சம் கவிதைகள்

கற்கள் விழுமென்று
பழுத்த மரமாய் பயந்திருந்தேன்
உன்னிடமிருந்து மட்டும் வருகின்றது
சினேகப்பார்வை - பிறகென்ன
உனக்காகவே பழுக்கின்றேன்


சுடும் சொல்லை வீசியெறிந்து
என்ன செஞ்சிடப் போகிறாய்,
பூக்களை எறிந்து பாரேன்,
முன்னைவிட இன்னும்
பிரியமாய் இருப்பேன்


எப்படி எப்படியோ
இருக்கின்றோம்,
மூர்கமாய் முஷ்டி
மடக்கிக் கொண்டும்,
குழைவாய் தோற்சாய்ந்து கொண்டும்;
- எல்லாமே அன்புடன்தான்

0 comments:

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin